Wednesday, March 19, 2008

நடமாடும் இரத்த வங்கியை அறிமுகப்படுத்தியவர் -டாக்டர் நார்மன் பெத்யூன்



மேடம் சன்யாட்சன்



கடந்த காலத்து மனித உலகத்தை தற்போதைய உலகத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தால், தற்போதைய உலகம் எவ்வளவு தூரத்திற்குச் சிக்கலாக உள்ளது என்பதை ஒருவரால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். மிக முன்னே றிய தகவல் தொலைத்தொடர்பு காரணமாய், உலகத்தின் மற்றும் மனித சமூகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நடக்கும் தனிப்பட்ட சம்பவங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட சீரழிவு என்று எதுவும் தற்போது இல்லை; அதுபோலவே அனைவருடைய முன்னேற்றத்திற்கும் உதவாத தனிப்பட்டவர்களின் முன்னேற்றங்களுக்கு மட்டும் உதவும் வளர்ச்சியைக் கூட முன்னேற்றம் என்று கூற முடியாது.



தற்போதைய நிலைமை, நமது மக்களது மனதில் சரியான முறையில்தான் பிரதிபலிக்கின்றன. மனித மனத்தில் உள்ள விஷயங்கள் கூட, உலகளாவிய வாய்ப்புகளுடனும், சிக்கல்களுடனும் தான் உள்ளன என்பதை மறுக்க முடியாது. தன்னுடைய அண்டை நாட்டவர்களிடம் உள்ள உறவைக்காட்டிலும், தனது உள்நாட்டு நிலைமையைக் கணக்கில் கொண்டு, தனது நாடு மற்றும் மக்களின் நலத்தை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படுவது என்பது இன்றைய மனிதனுக்குப் போதாது. இன்றைய உலக நிலைமையின் அழுத்தம், நம் அனைவரையும் சுற்றிக் கொண்டு அலைக்கழிக்கிறது. ஆகவே, இதில் அனைவரும் கலந்து கொள்வதின் மூலமும், அதற்குப் பங்களிப்பதன் மூலமும் மட்டும்தான், நாம் நமது எதிர்காலத்தைச் சரியான திசையில் செல்ல நிர்பந்திக்க முடியும். இன்றைய மனிதனுடைய சிந்தனை செய்ய வேண்டிய உச்சக்கட்ட வேலை என்னவென்றால், சாவுக்கும் மற்றும் பிற்போக்கு சக்தி களுக்கும் எதிராகப் போராடுவதும், முந்தைய உலகம் தராத ஆனால், நமது உலகம் தற்போதைய உலகம் தரும் வாய்ப்புக்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, அந்த உலகத்தை மனிதனுக்காகப் படைத்துப் புதிய யதார்த்தத்தை ஏற்படுத்துவதுதான்.



காலம் கோரும் பணிகளை, அனைத்தையும் விஞ்சும் அளவுக்கு ஈடுபாட்டுடன், உறுதியுடன், தைரியத்துடன், திறமையுடன் செய்பவர்களைத்தான், அந்தக் காலக்கட்டத்தின் மகாமனிதர்களாய் நாம் கருதுகிறோம். இன்றைய காலக் கட்டத்தில் இப்படிப்பட்ட மகாமனிதர்களின் பணிகள் என்பது உலகம் தழுவியதாக இருக்கும். ஆகவே, தற்போதைய மகாமனிதர்கள் அவர்கள் தமது உள்நாட்டில் பணிபுரிந்தாலும் சரி அல்லது வெளிநாட்டில் பணிபுரிந்தாலும் சரி, அவர்கள் உலக மகாமனிதராகவே கருதப்படுகிறார்கள். வரலாற்றைப் புனராலோசனை செய்யும் வரைக்கும் காலம் தாழ்த்தாமல், உடனடியாகத் தற்போதே அவர்கள் மகாமனிதர்களாய் கருதப்படுகிறார்கள்.



நார்மன் பெத்யூனும் மகாமனிதர்தான். அவர் மூன்று நாடுகளில் வளர்ந்து, பணிபுரிந்து போராடிய போராளி; முதலில் அவரது சொந்த நாடான கனடாவில், பின்னர் முற்போக்கு எண்ணமுள்ள அனைத்து நாட்டு மனிதர்களும் ஒன்றாய் கூடி நாஜியிசத்திற்கும், பாசிசத்திற்கும் எதிராக மக்களின் முதல் பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையை °பெயினில் நடத்திய போது, அங்கு சென்று கலந்து கொண்டார். சீனாவில், ஜப்பானிய பாசி°டுகள் தாங்கள் கைப்பற்றி விட்டதாகச் சந்தோசமாக நினைத்துக் கொண்டிருந்த சீனப்பகுதிகளை மீட்டு, தேசிய விடுதலைக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் புதிய அடித்தளத்தை அமைத்த நமது கொரில்லா படையை பெரும் வல்லமை வாய்ந்த மக்கள் இராணுவமாக மாற்ற உதவினார். அந்த ராணுவம்தான் கடைசியாக சீனாவை விடுவித்தது.



நார்மன் பெத்யூன் ஒரு மருத்துவர். அவர் தனது தொழிலில் தனக்கு நன்கு பரிச்சயமான உபகரணங்களை ஆயுதமாகப் பயன்படுத்திக்கொண்டு சண்டையிட்டார். அவர் தனது துறை சார்ந்த அறிவியலில் பெரும் திறமை சாலி மட்டும் அல்லாது முன்னோடியும் ஆவார். அவர் தனது ஆயுதங்களை எப்போதும் கூர்மையாகவும், புதுப்பொழிவுடனும் வைத்திருந்தார். அவர் தனது பெரும் திறன்களை உணர்வுப் பூர்வமாகவும், தொடர்ந்து பாசிசத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் எதிராகப்போராடும் முன்னணி படைக்கலமாகவும் செலவழித்தார். அவரைப் பொறுத்தமட்டில் பாசிசம் என்பது பெரும் கொள்ளை நோய்; அந்த நோய் தான் எதைக்காட்டிலும் மனித இனத்திற்குப் பேரழிவை ஏற்படுத்துவதாகும்.



யுத்தகளத்தில் இரத்த வங்கிக் கொணர்ந்த முதல் மருத்துவ மனிதன் டாக்டர் நார்மன் பெத்யூன்தான். இரத்தமாற்று மூலம், °பெயின் குடியரசுப் படையின் நூற்றுக்கணக்கான போராளிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். சீனாவில் அவர் கீழ்க்காணும் சுலோகத்தை இறக்கிவிட்டு, அதைத்தானும் கடைபிடித்தார். “மருத்துவர்களே! காயம் அடைந்தவர்களிடம் நீங்கள் போங்கள்! அவர்கள் உங்களிடம் வரவேண்டும் எனக் காத்திருக்காதீர்கள்!”



டாக்டர் நார்மன் பெத்யூன் ஏற்படுத்திய சர்வதேச அமைதி மருத்துவமனைகள் தற்போதைய புதிய நிலையில், விடுதலை பெற்ற சீனாவில் இயங்கிக் கொண்டிருக்கிறது. தான் இறந்தபிறகு அதைத் தொடர்ந்து நடத்துவதற்காக டாக்டர் கீச்சை பெத்யூன் நியமித்திருந்தார். டாக்டர் கீச், பெத்யூனுடன் சேர்ந்து °பெயின் போரில் கலந்து கொண்டவர் ஆவார். ஆனால் அவர் இந்தப் பொறுப்பை எடுத்துச் செய்வதற்கு, சியாங்கை சேக்கின் அரசு அனுமதிக்க வில்லை. கடைசியில் இந்திய மருத்துவ யூனிட்டைச் சார்ந்த டாக்டர் கோட்னி°, டாக்டர் பெத்யூன் மருத்துவமனைகளின் டைரக்டர் கொறுப்பை ஏற்றுக் கொண்டு, அவர் விட்டுச்சென்ற பணிகளை மிகத் தைரியமாகச் செய்தார். ஆனால், அவரும் தான் பணிபுரிந்து கொண்டிருக்கும்போதே இறந்தார். அவரைக் குணப்படுத்தும் மருந்து கிடைக்காததால் தான், அவரும் இறந்தார். டாக்டர் பெத்யூனுக்கம், டாக்டர் கோட்டினி°க்கும் தரப்பட வேண்டிய மருந்துகள் தடை செய்யப்பட்டிருந்தமையால். சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்பட்டு இறந்த பலரில் அவர்களும் ஒருவராகிவிட்டனர். அந்தத் தடை மட்டும் இல்லாமலிருந்தார், அவர்கள் இன்றும் உயிருடன் இருந்து உலக மக்களின் விடுதலைக்காகப் போராடிக் கொண்டு இருந்திருப்பார்கள்.



நமது காலக்கட்டத்தின் மகாமனிதரான டாக்டர் பெத்யூனுடன், நான் தனிப்பட்ட முறையில் பரிச்சயம் வைத்துக் கொண்டதற்காக அடையும் மகிழ்ச்சியைக் காட்டிலும், அவரது வாழ்க்கையைப் பெரும் மக்கள் திரளுக்கு அறிமுகப்படுத்து வதில் பெரிதும் புளகாங்கிதம் அடைகிறேன். விடுதலைக்காகப் போராடும் அனைத்து மக்களுக்கும் ஒரு பொதுவான களனாய்த் திகழ்ந்து, அதன் உயர்ந்த சின்னமாய் டாக்டர் பெத்யூன் இன்றும் திகழ்கிறார். அவரது வாழ்க்கை, இறப்பு, பாரம்பரியம் என்று அனைத்தும் எனக்கு மிகவும் நெருக்கமானதாகும். நான் சேர்மனாயுள்ள சீன நல்கழகத்திற்கு அவரது பணியையும், அவரது நினைவை யும் தொடர்ந்து எடுத்துச் செல்லும் பொருட்டும், பெத்யூன் அமைதி மருத்துவ மனை மற்றும் பெத்யூன் மருத்துவப்பள்ளி வலைப்பின்னலுக்கு ஆதரவு பெறுவதற்கும் உழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே அந்தப்பணி யை மேற்கொண்டு நாங்கள் செய்து வருகிறோம். ஆகவே, அவர் நமது தேசிய விடுதலைக்காக மக்கள் போரில் பெரும் சேவை செய்தார் என்பதற்கு மட்டுமல்லாமல், என் லீக் பணியின் காரணமாகவும் அவர் எனக்கு மிகவும் நெருங்கியவராகிறார்.



நவசீனா, டாக்டர் பெத்யூனை எப்போதும் மறக்காது. நமது விடுதலைக்கு உதவியதில் அவரும் ஒருவர், அவரது பணியும், அவரது நினைவுகளும் எப்போதும் நம்மிடம் நீங்காது நிறைந்து நிற்கும்.



இப்புத்தகம்


டாக்டர் நார்மன் பெத்யூன், சவுத்விஷன் 215 (132) அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை - 600 086.விலை ரூ.120/-

No comments: