Thursday, December 7, 2006

பேச்சும் - பேரரசும்


திருவாளர் விஜயகாந்த் அவர்கள், கடந்த சட்டமன்றத்தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்றத் தெகுதிகளில் தனித்துப்போட்டியிட்டார். மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அவரது கட்சி ஒரே ஒரு இடத்தில் (விருத்தாச்சலம் -விஜயகாந்த் போட்டியிட்டது) மட்டும் வெற்றி பெற்றது. அவர் கட்சி ஆரம்பித்த போதும், அதற்குப் பின்பும் அவருடைய கட்சியில் சில அரசியல் கட்சித் தலைவர்கள் சேர்ந்தனர்.
அவர்கள் அனைவரும் அவர்கள் முன்னர் சார்ந்திருந்த கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அல்லது நீதிமன்றத்தில் வழக்குகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள். இது ஏதோ அரசியல் காரணங்களுக்காகப் போடப்பட்ட வழக்குகள் அல்ல. ஊழல் சம்பந்தப்பட்ட வழக்குகள். விஜயகாந்த் அவர்கள் கட்சியின் நோக்கம், கொள்கைகள் என்ன என்று கேட்டால், அதற்கு எந்தப் பதிலும் இல்லை. கட்சியில் ஊழலுக்கு இடமில்லை என்று கூறிவிட்டு ஊழல் செய்துள்ளவர்களை கட்சியில் சேர்த்திருக்கிறேர்களே என்று கேட்டால், ஏன் அவர்கள் திருந்தவே கூடாதா? என்கிறார். நம்முடைய கேள்வி என்னவென்றால், ஒரு வழக்கில் கைதாகி, சிறைத்தண்டனை அனுபவித்து வெளி வந்தவர், அவர் திருந்திவிட்டார் என்பதாக கூறுகிறார் என்றால், அவருடைய வழக்கு ரத்து செய்யப்பட்டு விடுமா? அல்லது அவர் திருந்தி விட்டார் என நீதிமன்றம் சான்றிதழ் கொடுத்து பாராட்டுமா? அதெல்லாம் ஒன்றுமில்லை.
ஒருமுறை முதுல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுவிட்டால், நீதிமன்றம் அவரை விடுவித்தால் மட்டுமே அவர் குற்றச்சாட்டிலிருந்து வெளிவரமுடியும். அவர் மேல் உள்ள கறை நீக்கப்படும். அதைவிட்டு, ஒருவர் திருந்தி விட்டார் என்பதற்காக அவர் மேல் உள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிடாது. விஜயகாந்த் அவர்கள் இதை நினைவில் கொள்வது நல்லது.மேலும், ஜெயலலிதா அவர்கள் விஜயகாந்தைப் பற்றி, சட்டமன்றத்திற்கு குடித்து விட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டினார். இது குறித்து அதிமுக, தேமுதிக அறிக்கைப் போர் நடந்தது. இது குறித்து விஜயகாந்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அந்தம்மாவா எனக்கு ஊற்றிக்கொடுத்தார் என்று மறுகேள்வி கேட்டுள்ளார். செய்தியாளர்கள் மறுபடியும் கேட்டதற்கு மழுப்பலாகப் பதில் சொல்லி, அந்த்க் கேள்விக்கான பதிலை இதுவரை சொல்ல வில்லை.டிசம்பர் மாத முதல்வாரத்தில் மட்டும் இரண்டு செய்திகள் விஜயகாந்த் கட்சி பற்றிய இரண்டு செய்திகள் வெளிவந்துள்ளன. ஒன்று, விஜயகாந்த் பெயரைப் பயன்படுத்தி சில பேர் டெண்டர் எடுத்துள்ளனர். இதனால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றொன்று விஜயகாந்த் கட்சிக் கூட்டத்தில் இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளனர்.எனவே, திருவாளர் விஜயகாந்த் அவர்கள் முதலில் தன் கட்சியை ஒழுங்குபடுத்தட்டும், அடுத்து மக்களுக்கு சேவையாற்றட்டும்.

1 comment:

கமலக்கண்ணன் said...

hi kennady very good on your website by kamalakkannan